Saturday, March 28, 2009

ஓடி விளையாடு, ஒலிம்பிக் விளையாட்டு...


முதல் முதல் 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும், அதற்கென்று அந்த நாட்டில் ஒலிம்பிக் சின்னம் ஒன்று உருவாக்கப்படும் அதன் படம் உங்களுக்காக...






























Friday, March 27, 2009

மறுஜென்மம்???


மறுஜென்மம் இருக்கோ, இல்லையோ, அது நமக்கு தெரியாது. மறுஜென்மம் இருந்து அது ஒருவருக்கு முன்ஜென்மத்தில் தெரியவந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இந்த கதையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஊரில் மகான் ஒருவர் இருந்தார். அவர் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர் நிறைய விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மறுபிறவி பற்றி ஆராய ஆரம்பித்தார். முடிவில் அவர் அவரது மறுபிறவியில் பன்றியாக பிறக்க போவதாக கண்டறிந்தார்.

அது அவருக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகு அவர் அவரது மகனை அழைத்து நான் மறு பிறவியில் பன்றியாக பிறக்க போகிறேன். என்னால் போயும் போயும் ஒரு பன்றியாக வாழ முடியாது. அதனால் நீ என்னை, அதாவது நான் பன்றியாக பிறந்தவுடன் என்னை உன் கோடாலியால் வெட்டி கொன்று விடு என்றார்.

அவர் சாகும் காலம் நெருங்கியது. அவர் சொன்னது போல் அவரது மகன் சில கர்ப்பமாக இருக்கும் பன்றிகளை வாங்கி வளர்த்து வந்தான். அவர் இறக்கும் நேரம் நெருங்கியது. அதே நேரத்தில் ஒரு பன்றி குட்டி போடுவதற்க்காக தவித்துக்கொண்டிருந்தது. அவரது மகனும் கோடாரயுடன் தயாராக இருந்தான். 

அவர் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது அவருக்கு ஒரு ஞானம் தோன்றியது. அவர் அவரது மகனை பார்த்து நான் இந்த பன்றியின் வாழ்கையை வாழ்ந்து பார்க்க ஆசை படுகிறேன் அதனால் நீ என்னை கொல்லாதே! என்னை கொல்லாதே! என்று உயிரிழந்தார். அதே நேரத்தில் ஒரு அழகான பன்றி குட்டி ஒன்று பிறந்தது.

அவர் ஞானத்தில் தோன்றியது என்னவாக இருக்கும்? ஏன் அவர் கடைசி நேரத்தில் அப்படி அவரது மகனிடம் சொல்லவேண்டும்?

...
...
...

அவரது சாகும் நேரத்தில் அவரிடம் பாதி உயிரும், அந்த பிறக்கும் நிலையில் உள்ள பன்றியிடம் பாதி உயிரும் இருந்தது. அப்போது என்ன எண்ணம் அந்த ஞானிக்கும் தோன்றி இருக்க முடியும். 

அந்த பன்றி பிறக்க போகும் உயிர் அது வாழ்க்கை அதற்க்கு பெரிதாக இருக்குமா இல்லையா? அந்த பன்றி உயிர் வாழ ஆசை படுவது ஒன்றும் ஆசர்யபடுவதற்க்கில்லை

பன்றியாக இருந்தாலும் அதுவும் உயிர் வாழ அசைபடுமல்லவா அது தான் அந்த ஞானிக்கும் தோன்றியது.

கதையை பற்றி உங்கள் யோசனையை கூறலாம்...





Wednesday, March 25, 2009

அவசியம் தெரிய வேண்டும்...


வேலை பார்க்கும் போது இருவர் பேசிக்கொள்கிறார்கள்.

திரு. முட்டு : டேய் நட்டு, நான் ஐந்து மாசமா இரவு வகுப்புக்கு படிக்க போறேன். அடுத்த வாரம் எனக்கு தேர்வு.

திரு நட்டு : அப்படியா டா.

திரு. முட்டு : நிறைய விஷயம் எனக்கு இதன் மூலம் தெரியுது டா

திரு நட்டு : அப்படி என்னடா தெரிஞ்சி கிட்ட?

திரு. முட்டு : உதாரணத்துக்கு! கிரகாம் பெல் யாருன்னு உனக்கு தெரியுமா?

திரு நட்டு : தெரியாது.

திரு. முட்டு : அவுருதாண்ட தொலைபேசியை கண்டுபிடித்தார். இதெல்லாம் நான் இரவு வகுப்புக்கு போறது மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி விடு. கொலம்பஸ் யாருன்னு உனக்கு தெரியுமா? 

திரு நட்டு : தெரியாது.

திரு. முட்டு : அவுருதாண்ட அமெரிக்காவ கண்டுபிடிச்சாரு. இதெல்லாம் நான் இரவு வகுப்புக்கு போறது மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி விடு. 
இந்தியாவோட தலைநகரம் எதுன்னு உனக்கு தெரியுமா?

திரு நட்டு : தெரியாது.

திரு. முட்டு : புது டெல்லி டா.

பாவம் நட்டு கடுப்பாயிடான். இந்த முறை இவன் முந்திகிட்டான்.

திரு நட்டு : குப்புசாமி யாருன்னு உனக்கு தெரியுமா?

திரு. முட்டு : யாருடா அவரு? நான் இத என்னோட இரவு வகுப்புல படிக்கலயேடா.

திரு நட்டு : அவருதாண்டா உன்னோட பொண்டாட்டி கூட சுத்திகிட்டு இருக்கார். நீ இரவு வகுப்பு போறதா நிறுத்து அப்போதான் அவரு யாருன்னு உனக்கு தெரியும்!!!

அவசியமா தெரிஞ்சிக்க வேண்டிய விசயத்த எந்த வகுப்புக்கு போய் தெரிஞ்சிக்க முடியும்.

சொல்லுங்க பாப்போம்

Monday, March 23, 2009

என்னைக்கவர்ந்தவர்...



என்னைக் கவர்ந்தவர் பற்றி "ரம்யா" அக்கா அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார். அவரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பதிவு.

நான் சிறுவயதில் இருந்தே இவரின் பெருமையை கேட்டும் கண்டும் வந்திருக்கிறேன். இவர் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் புகழ்ந்து பாராட்டும் பெருமைக்குரிய மனிதர்.



தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் இவர்.

இவர் சுய விவரம்:
பெயர்: டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
பிறப்பு: 15 அக்டோபர் 1931.
தந்தையின் பெயர் : ஜைனுல்லாபுதீன்.
தாயின் பெயர் : ஆஷியம்மா.
சகோதரி : ஜொகாரா ஜலாலுதின்.
சிறு வயது நண்பர்கள்: ராமநாத சாஸ்த்ரிகள், அரவிந்தன், சிவப்பிரகாசம்.

இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் இவர் (25 ஜூலை 2002).

விருதுகள்:
30 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இவருக்கு டாக்டர் பட்ட
ம் வழங்கியுள்ளது.
பத்ம புஷன் (1981) 
பத்ம விபுஷன் (1990) 
பரத் ரத்னா (1997)
இன்னும் பல பல..........

இவரது சுயசரிதம் - 
அக்னிச் சிறகுகள் என்ற பெயரில் தமிழிலும். (Wings of Fire) என்ற பெயரில் ஆங்கிலத்திலும் 
வெளியானது. இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது 
குறிப்பிடத்தக்கது.

பல புத்தகங்கள் இவர் எழுதியும் பலர் இவர் பற்றி எழுதியும் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகலம் எஸ் எல் வி - 3 திட்டத்திலும், அக்னி திட்டத்திலும் அவரது முழு திறமையும் நாட்டு முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினார்.


நமது தாயகத்தின் பெருமையை தலைநிமிரச் செய்த மேதை.

நாட்டின் பாதுகாப்பிற்காக வானத்தில் வேலி கட்டியவர்.

சோதனைகளிலும் சாதனை படைத்தவர்.

கடலோர படகுக்காரர் மகன் கடலளவு விரிந்து வானளவு உயர்ந்தவர்.

விண்வெளி, பாதுகாப்புதுறை ஆராய்ச்சி, அணுசக்தி என்ற மூன்று துறையிலும் தேர்ந்தவர்.

இந்தியாவின் குடியரசுத்தலைவராய் பணியாற்றியவர்.

அவரது வார்த்தைகள் சில:

நீங்கள், நான், இந்த பூமியில் உள்ள நாம் அனைவருமே இறைவனால் அனுப்பப்பட்டிருக்கிறோம். நமக்குள்ளே இருக்கும் அனைத்து ஆக்கத்திறன், வளங்களையும், பயன்படுத்திக்கொண்டு மனசாட்சிக்கு பணிந்து அமைதியாக வாழ்வதற்க்காக அவன் நம்மை படைத்திருக்கிறான்.

நமது வாய்ப்புகளை தெரிவு செய்வதிலும், நமது தலை விதியை உருவாக்கிக் கொள்வதிலும் தான் நாம் வேறுபடுகிறோம். வாழ்க்கை ஒரு சிக்கலான ஆட்டம்! ஒரு மனிதனாக வாழ்வதற்க்கான உங்களுடைய பிறப்புரிமையை தக்க வைத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே உங்களால் அதில் வெற்றி பெற முடியும்.

இந்த உரிமையை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். எந்த விஷயத்தையுமே இப்படிதான் செய்தாக வேண்டும் என்று மற்றவர்கள் நிர்பந்தத்தை, புறக்கணிக்கும் மன உறுதி உங்களுக்கு வேண்டும். ஒரு துறையில் ஈடுபடும்போது எப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையிலும் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதை புரிந்து அதற்கேற்றாற்போல் செயல் பட வேண்டும்.

இவரது குறிக்கோள் 2020 இந்தியா வல்லரசு நாடாகும் என்பது.

இவரது இணையத்தளம்: http://www.abdulkalam.nic.in

இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துக்களை எழுதவும்...

Thursday, March 19, 2009


வெற்றி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா?

1. நாலு வயசுல டவுசர்ல மூச்சா போகாம இருக்கிறது.

2. பண்ணிரண்டு வயசுல நண்பர்கள சேக்கறது.

3. பதினெட்டு வயசுல வண்டி ஓட்டரத்துக்கு உரிமம் வாங்கறது.

4. முப்பத்தி ஐந்து வயசுல நிறையா பணம் சேக்கறது.

5. ஐம்பது வயசுல எண் 4 பார்க்கவும்.

6. எழுவது வயசுல எண் 3 பார்க்கவும்.

7. எழுபத்தி ஐந்து வயசுல எண் 2 பார்க்கவும்.

8. என்பது வயசுல எண் 1 பார்க்கவும்.

---------------------------------------------------------------------------------------------------------------

இருபத்தி எழாவது ஆங்கில எழுத்து. உங்களுக்கு தெரியுமா?

கீழே பார்க்கவும். கீழேனா தரைய பாக்காதீங்க....












விடைய பாக்கறீங்களா....

சூப்பர் அப்பு

எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?

ஐயோ! ஐயோ!

Sunday, March 15, 2009

தெரிந்து கொள்ள வேண்டியவை - (என் தோழிகள்)...


என் தோழிகள் அனைவரையும் ஒரே பதிவில் உங்களுக்காக...

1952 முதல் 2008 வரை பிரபஞ்ச அழகிகள் இந்த பதிவில்...

































இப்போதைக்கு இவர்கள் மூவரும் தான் என் உயிர் தோழிகள்.

உங்கள் கருத்துகளை பதியவும்



Saturday, March 14, 2009

தெரிந்து கொள்ள வேண்டியது...


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அது எந்த விஷயமாகவும் இருக்கலாம்.

உதாரணம் சொல்லனும்னா

திருநெல்வேலிக்கு அல்வா...
மணப்பாறை முறுக்கு...
திருப்பதி லட்டு...

இதெல்லாம் சொல்லும் போதே வாயில் எச்சில் உருமே...

என்னடா இவன் சாப்படற ஐட்டமா சொல்லறானேட்டு பாக்கறீங்களா.

அம்மாங்க இந்த பதிவு சாப்படற விசயத்த பத்தி மட்டும்.

நமக்கு தமிழ்நாடு உணவு வகைகள் எல்லாம் சிலருக்கு தெரியும், சிலருக்கு 
தெரியாமகூட இருக்கலாம்.

தமிழ்நாட்டு உணவே அருமைனா நம்ம மொத்த இந்தியாவின் உணவு வகை எந்த அளவுக்கு அருமையா இருக்கும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரசித்தி பெற்ற உணவுவகைகள் பின் தொடர்கிறது

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, புது டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆந்திரா, காஷ்மீர், குஜராத், பீகார், பஞ்சாப்... 

போன்ற பல மாநிலங்களின் உணவு வகைகள் உங்களுக்காக...

மேலும் விபரங்களுக்கும் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று அறிந்துகொள்ளவும்.

இதுபற்றி உங்கள் கருத்துகளை பதியவும்...

Thursday, March 12, 2009

உலக நீயதி


நீ அழுகும் பொது உன் கண்ணீர் யார் கண்ணுக்கும் தெரியாது.

நீ கவலை படும் பொது உன் வலி யார் கண்ணுக்கும் தெரியாது.

நீ சந்தோசமாக இருக்கும் பொது உன் சிரிப்பு யார் கண்ணுக்கும் தெரியாது.

ஆனால் நீ ஒரு அழகான பெண்ணுடன் / ஆண்ணுடன் சேர்ந்து சுற்றும் பொது இந்த உலகமே உன்னை பார்க்கும். இது தான் உலக நீயதி.

----------------------------------------------------------------------------

ஆண்களின் மூன்று கனவு...

மிகவும் அழகாக இருக்க வேண்டும் அவன் தாயின் கனவை போல் (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)

பணக்காரணாக இருக்க வேண்டும் அவன் குழந்தை என்னத்தை போல்.

அதிக மான பெண் அவன் வாழ்வில் இருக்க வேண்டும் அவன் மனைவி சந்தேகப்படுவதை போல்

--------------------------------------------------------------------------------

கணவன் மனைவி இருவரும் சிருநீரகம் & நுரையீரல்
கணவன் - நுரையீரல், மனைவி - சிருநீரகம்

நுரையீரல் செயல்படவில்லை என்றால் சிருநீரகம் செயல்படாது.

சிருநீரகம் செயல்படவில்லை என்றால் நுரையீரல் இன்னொரு சிறுநீரகத்தை வைத்துக்கொண்டு செயல்படும்.

Tuesday, March 10, 2009

முடிந்தால் கண்டுபிடியுங்கள்...


நீங்கள் கிர்க்கெட் பார்பவரா?

நீங்கள் கிர்க்கெடில் ஆர்வம் உள்ளவரா?

எந்த அளவுக்கு உங்களுக்கு கிர்க்கெட் தெரியும்?

இங்கு நான் சில குறிப்புக்கள் தந்திருக்கிறேன். அதை வைத்துக்கொண்டு உங்களால் பதில் சொல்ல 
முடியும் என்றால் நீங்கள் கிர்க்கெட்ல் புலி என்று விருதுகள் தரப்படும்.




முதல் குறிப்பு: வரலாறு சொல்லும் வகையில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய விளையாட்டில் இவர்தான் அணி தலைவராக இருந்தார்.


'
'
'


இரண்டவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் முதலாவதாக பந்து வீசியவர் இவர்.


'
'
'


முன்றாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் முதலாவதாக மட்டை வீசியவரும் இவர்தான்.


'
'
'


நான்காவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக இவர்தான் கடைசி பந்து வீசினார்.


'
'
'


ஐந்தாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக இவர்தான் கடைசி பந்தை எதிர் கொண்டார்.





ஆறாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் கடைசி விக்கெட்டை சாய்த்தார்.


'
'
'


எழாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


'
'
'


எட்டாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் கடைசி பந்தில் ஆறு ரன் குவித்து வெற்றியை அந்த ஆணிக்கு பெற்று தந்தார்.


'
'
'


ஒன்பதாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் அணி தலைவராக அதுவும் அவரது முதல் ஆட்டத்திலேயே.


'
'
'


இன்னும் தெரியலையா?


'
'
'


விடையை பார்ப்போம்...

அவர் வேறு யாரும் இல்லை 


'
'
'


அமீர் கான்.

லகான் படத்துக்காக.

யாரும் டென்சன் ஆகவேண்டாம்....

இது குறித்து உங்கள் பதிவுகளை பதியவும்...