Wednesday, March 25, 2009

அவசியம் தெரிய வேண்டும்...


வேலை பார்க்கும் போது இருவர் பேசிக்கொள்கிறார்கள்.

திரு. முட்டு : டேய் நட்டு, நான் ஐந்து மாசமா இரவு வகுப்புக்கு படிக்க போறேன். அடுத்த வாரம் எனக்கு தேர்வு.

திரு நட்டு : அப்படியா டா.

திரு. முட்டு : நிறைய விஷயம் எனக்கு இதன் மூலம் தெரியுது டா

திரு நட்டு : அப்படி என்னடா தெரிஞ்சி கிட்ட?

திரு. முட்டு : உதாரணத்துக்கு! கிரகாம் பெல் யாருன்னு உனக்கு தெரியுமா?

திரு நட்டு : தெரியாது.

திரு. முட்டு : அவுருதாண்ட தொலைபேசியை கண்டுபிடித்தார். இதெல்லாம் நான் இரவு வகுப்புக்கு போறது மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி விடு. கொலம்பஸ் யாருன்னு உனக்கு தெரியுமா? 

திரு நட்டு : தெரியாது.

திரு. முட்டு : அவுருதாண்ட அமெரிக்காவ கண்டுபிடிச்சாரு. இதெல்லாம் நான் இரவு வகுப்புக்கு போறது மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி விடு. 
இந்தியாவோட தலைநகரம் எதுன்னு உனக்கு தெரியுமா?

திரு நட்டு : தெரியாது.

திரு. முட்டு : புது டெல்லி டா.

பாவம் நட்டு கடுப்பாயிடான். இந்த முறை இவன் முந்திகிட்டான்.

திரு நட்டு : குப்புசாமி யாருன்னு உனக்கு தெரியுமா?

திரு. முட்டு : யாருடா அவரு? நான் இத என்னோட இரவு வகுப்புல படிக்கலயேடா.

திரு நட்டு : அவருதாண்டா உன்னோட பொண்டாட்டி கூட சுத்திகிட்டு இருக்கார். நீ இரவு வகுப்பு போறதா நிறுத்து அப்போதான் அவரு யாருன்னு உனக்கு தெரியும்!!!

அவசியமா தெரிஞ்சிக்க வேண்டிய விசயத்த எந்த வகுப்புக்கு போய் தெரிஞ்சிக்க முடியும்.

சொல்லுங்க பாப்போம்

14 comments:

இராகவன் நைஜிரியா said...

Me the First..

இராகவன் நைஜிரியா said...

ஜோலி இருக்கு... முடிச்சுட்டு வந்து கும்மி அடிக்கிறேன்..

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

என்னாச்சுங்க

இப்படி ஒரு கண்டுபிடிப்பு

Ungalranga said...

நல்லா தானே இருந்தீங்க..

RAMYA said...

ME the 3rd??

RAMYA said...

//
திரு. முட்டு : டேய் நட்டு, நான் ஐந்து மாசமா இரவு வகுப்புக்கு படிக்க போறேன். அடுத்த வாரம் எனக்கு தேர்வு.
//

பகல்லே படிச்சாவே ஒழுங்கா தேர்வு நான் எழுத மாட்டேன்.

முட்டு எப்படியோ தெரியலையே ??

RAMYA said...

பெயிலானா முட்டிக்கி முட்டி தட்டிட்வோம் தெரியுமா???

RAMYA said...

//
திரு. முட்டு : அவுருதாண்ட தொலைபேசியை கண்டுபிடித்தார். இதெல்லாம் நான் இரவு வகுப்புக்கு போறது மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி விடு. கொலம்பஸ் யாருன்னு உனக்கு தெரியுமா?
//

ஐயோ பாவம், ஏன் பகல்லே போனா காது கேக்காதா, இல்லே கண்ணு தெரியாதா :))

RAMYA said...

//
திரு. முட்டு : அவுருதாண்ட அமெரிக்காவ கண்டுபிடிச்சாரு. இதெல்லாம் நான் இரவு வகுப்புக்கு போறது மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி விடு.
இந்தியாவோட தலைநகரம் எதுன்னு உனக்கு தெரியுமா?
//

அப்படியா சொல்லவே இல்லை :))

RAMYA said...

//
திரு நட்டு : குப்புசாமி யாருன்னு உனக்கு தெரியுமா?
//

எனக்கு தெரியும் காயாலான்கடை வச்சிருக்காரு :))

RAMYA said...

//
திரு நட்டு : அவருதாண்டா உன்னோட பொண்டாட்டி கூட சுத்திகிட்டு இருக்கார். நீ இரவு வகுப்பு போறதா நிறுத்து அப்போதான் அவரு யாருன்னு உனக்கு தெரியும்!!!
//

படு பாவி மண்டையை பொழக்க வேண்டாம்??

RAMYA said...

நிறைய பேருக்கு சொல்லி அனுப்பினேன்.

யாரையும் காணோமே சரி நானும் ssssss :))

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் இராகவன்
வாருங்கள் ஜமால்
வாருங்கள் ரங்கன்
வாருங்கள் ரம்யா

அண்ணன் வணங்காமுடி said...

பின்னுடதிர்க்கு நன்றி...