Monday, June 29, 2009

இந்திய அலுவலகங்களில் நடக்கும் ஒரு உண்மைக்கதை...






ஒரு காலத்தில் இந்தியாவில் ஒரு படகு குழு இருந்தது.




இந்திய அணியும் ஜப்பான் அணியும் வருடா வருடம் போட்டி நடத்த ஒப்பந்தம் செய்தனர்.





இரு அணிகளும் மிகவும் கடுமையாக போட்டி போட்டனர் ஆனால் ஜப்பான் இறுதியில் ஒரு மைல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





இந்தியா அணி இதனால் மிகவும் சோர்வடைந்து. ஆனால் முக்கிய அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்து ஆராய முடிவு எடுத்தனர்.



கடினமாக ஆராய்ந்த பிறகு அவர்கள் ஒன்றை கண்டு பிடித்தனர். ஜப்பான் அணியில் படகை செலுத்த ஏழு பேரும் அவர்களுக்கு ஒரு தலைவரும் இருந்தனர்.



ஆனால் இந்திய அணியில் ஒரு படகோட்டியும் ஏழு தலைவர்களும் இருந்தனர்.



இத்தகைய இக்கட்டான சுழ்நிலையில் இந்திய உயர் அதிகாரிகள் ஒரு முடிவு செய்தனர். ஒரு ஆலோசனை மையத்தை அணுகி அவர்களிடம் இருந்து ஒரு தீர்வு காண முற்பட்டனர்.

பல ஆய்வுகளுக்கு பின்னர் அந்த ஆலோசனை மையம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது அதில் இந்திய அணியில் மிக குறைந்த அளவு படகோட்டிகள் இருப்பதாக கூறினர்.




அறிக்கையை பார்த்த பின்னர் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்தனர். ஏழு தலைவர்களுக்கு பதிலாக நாலு தலைவர்களும் , இரண்டு மேலாளர்களும், ஒரு தலைமை மேலாளரும் இருக்குமாறு அணி மாற்றி அமைக்கப்பட்டது.




பின்னர் நடந்த போட்டியில் ஜப்பானியர்கள் இரண்டு மைல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.



தோல்வி காரணமாக அந்த ஒரு படகோட்டியை மேல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.


ஆனால் இந்திய அணியின் தலைமை அதிகாரிகள் போட்டியை நான்றாக ஊக்க படுத்தியதற்காக அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் அந்த ஆலோசனை மையம் ஆராய்ந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய அணியின் ஊக்கமும் உற்சாகமும் நன்றாகத்தான் இருந்தது அனால் உபகரணங்கள்தான் சரியில்லை என்றது. அதனால் அடுத்த போட்டிக்கு இந்திய அணி புதிய படகை தயார் செய்து கொண்டு இருக்கிறது.



இது மெய்யாலுமே இந்திய அலுவலகங்களில் நடக்குதுங்கோ. அலுவலக ஆசாமிகளுக்கு இது புரியும்.

இந்த மாதிரிதாங்க இன்றைக்கு இருக்கும் நிறைய தொழில்நுட்ப அலுவலகங்களில் நடந்துகிட்டு இருக்கு.


2 comments:

நட்புடன் ஜமால் said...

சர்தான் ...

யூர்கன் க்ருகியர் said...

நல்லா ஒட்டுராங்கையா படகை !