நோயாளி: ஆண்டாண்டு காலம் நீடுழீ வாழ எதாவது வழி இருக்கிறதா?
மருத்துவர்: கல்யாணம் பண்ணிக்கோ.
நோயாளி: அது பயனுள்ளதா இருக்குமா.
மருத்துவர்: இல்லை, இது போன்ற யோசனை வராமல் தடுக்கும்
--------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணத்தின் போது மணப்பெண்ணும், மணமகனும் கைகோர்க்கும் நிகழ்வு எதற்க்காக என்று தெரியுமா?
அதாவது பெருசா ஒன்னும் இல்ல, இரண்டு குத்து சண்டை வீரர்கள் சண்டை துவங்குவதற்கு முன்னால் கை குலுக்கிகொள்வது முறை. அதன் படியே இந்த நிகழ்வு நடக்கிறது
--------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: டார்லிங் இன்னைக்கு நமது கல்யாண நாள். என்ன பண்ணலாம்?.
கணவன்: இரண்டு பேரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அமைதியா இருப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணத்த காதல் கல்யாணம், பெரியோர்களால் நிட்சைக்கப்பட்ட கல்யாணம் என்று இரண்டு விதமா சொல்லும் போது ரொம்ப காமெடியா இருக்கு.
அதாவது சாவுல தற்கொலையையும், கொலையையும் பத்தி சொல்லறமாதிரி இருக்கு
--------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும், ஆனவர்கள் இத படிக்க வேண்டாம்.
யாவருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------
கணவன் கடைக்கு சென்று "பெண்ணை விட மேதை ஆண்" என்ற புத்தகம் இருக்கா.
சேல்ஸ் கேர்ள்: கற்பனை புத்தகங்கள் பக்கத்துல உள்ள அறையில் இருக்கு சார்.
--------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி: ஏன் ஆண்கள் இரண்டாம் கல்யாணம் பண்ண சட்டம் அனுமதிப்பதில்லை
பதில்: சட்டப்படி ஒரு மனிதனை இரண்டு முறை தண்டிப்பது கூடாது.
--------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி: நாய்கள் ஏன் கல்யாணும் பண்ணிகொள்வதில்லை?
பதில்: ஏன்னா அதுங்க ஏற்கனவே நாய்பொழப்பு தான் பொலைகிதுங்க
ஆண்களே இத படிட்ச பிறகு ரொம்ப சந்தோசமா இருக்கீங்களா. இதுகூட கொஞ்ச நேரம்தான். இவைஅனைத்தும் சிரிக்க மட்டும் சிந்திக்க அல்ல...
ஏன்னா பெண்கள் இந்நாட்டின் கண்கள். அதனால பெண்களை குறை சொல்லக்கூடாது. ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே. பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் வளர்ச்சிக்குத்தான் உறுதுணையாக இருகிறார்கள். சில பெண்கள் தான் சற்று தடுமாறி நிலைகுலைந்து வேறுபாதையில் செல்கின்றனர். அதனால் எல்லாரையும் குறை சொல்லக்கூடாது.
8 comments:
எனக்கு தூக்கம் கண்ண கட்டுது
நாளை மீண்டும் வாறேன்
// நட்புடன் ஜமால் said...
எனக்கு தூக்கம் கண்ண கட்டுது
நாளை மீண்டும் வாறேன் //
தம்பிக்கு தூக்கம் கண்ண கட்டுது... எனக்கு ஜோக்கைப் படிச்சு கண்ண கட்டுது..
//
கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும், ஆனவர்கள் இத படிக்க வேண்டாம்.
யாவருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் //
கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்...
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
நல்லா இருக்குங்கோவ்.. ஒன்னு,ரெண்டை இன்று எனது காலை வானொலி நிகழ்ச்சிக்காக சுட்டுட்டேன்.. ;)
வாருங்கள் ஜமால் அவர்களே
வாருங்கள் இராகவன் அவர்களே
வாருங்கள் லோஷன் அவர்களே
பின்னுட்டத்திற்கு நன்றி
//இராகவன் நைஜிரியா said...
கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்...
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம். //
பட்டபின் தான் புரியுது. சிலருக்கு அதுகூட புரியாது. இதுதான் மனித இயல்பு.
LOSHAN said...
நல்லா இருக்குங்கோவ்.. ஒன்னு,ரெண்டை இன்று எனது காலை வானொலி நிகழ்ச்சிக்காக சுட்டுட்டேன்.. ;) //
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை...
Post a Comment